பொதுத் துறை வங்கிகளான ஓரியண்டல் காமர்ஸ் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் நிதிச் செயல்பாடுகளைத் தடயவியல் தணிக்கை செய்ய, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறைச் செயலர் ஜி.எஸ். சாந்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழியர்கள் சிலரைத் தற்காலிகப் பணிநீக்கமும் இடமாற்றமும் செய்துள்ளதாகவும் கூறினார்.