கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கச்சா எண்ணெய், விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அது ஒரு பீப்பாய் (பேரல்) 45 டாலருக்குக் கீழ் குறைந்தது. இதனார், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை உயர ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டின் உச்ச விலையாக 62 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தொய்வு நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் விலைஉயர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், குர்திஸ்தான் அரசு, பாக்தாத் பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஒதுக்காவிட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று எச்சரித்திருப்பதும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பெட்ரோமேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.