ஏர்டெல் 4ஜி சேவை: சென்னையில் இன்று சோதனை முயற்சி!

வியாழன், 14 மே 2015 (20:24 IST)
தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், சென்னையில் இன்று தனது 4ஜி சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துகிறது.
 

 
சில ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, தங்களது 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் வித்தில் தொடங்கப்படும் 4ஜி சேவையை சோதித்து பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சென்னையைத் தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இந்த சோதனை முயற்சி தொடர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்