ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், இந்த நிதியாண்டிற்கான நிதிக் கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், மும்பையில் நடைபெற்றது.
அதன்படி, 7.25 சதவிகிதமாக உள்ள கடன் வட்டி 6.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்த வட்டி குறைப்பு காரணமாக, ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறையும் என்பதால், வீடு, வாகனம் மற்றும் தொழில் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.