வருமான வரித்துறை அலுவலகங்களில் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ளது சென்னை மண்டலம்.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு 2011-12ல் ரூ.33,041 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை கமிஷ்னர் கயன் சந்த் ஜெயின், இது தொடர்பாக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஐடி துறை, வங்கிகள் அதிகளவில் ரூ.100 கோடி அளவிற்கு வருமானவரி செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.