உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காவை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (17:52 IST)
காவேரி உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்காவை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி முதலீட்டாளர்கள் நாமக்கல்லில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவியால் கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு வழங்கிய மானியத் தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவில் தொழில் துவங்கிய முதலீட்டாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் தொழிலை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பூங்காவை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி குளக்கரைத் திடலில் உண்ணாவிரதம் இருந்தனர்.