சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம்

திங்கள், 18 மார்ச் 2013 (18:15 IST)
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்துள்ளது.

இன்றைய வர்த்க ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.36 புள்ளிகள் குறைந்து 19293.20 புள்ளிகளோடு காணப் பட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37.35 புள்ளிகள் குறைந்து 5835.25 புள்ளிகளோடு காணப் பட்டது. பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப்பங்குகள் சரிவில் முடிந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்