திருச்சானூர் பத்மாவதி கோயில் பிரம்மோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் இன்று துவங்கியது.

இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறும்.

webdunia photoWD
காலையில் கொடியேற்றம் முடிந்ததும், பவானி தாயார் அலங்காரத்துடன் வீதிகளில் பவனி வந்தார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. கோயில் பூசாரிகள் அங்குரார்ப்பணப் பூஜையை சிறப்பாக செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் பவனி வருவார்.