டிப்ளமோ' முடித்தவர்கள் நர்சிங் பட்டப் படிப்பில் சேர

Webdunia

வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (11:12 IST)
நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்பில் சேர இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றன.

சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசம்.

சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tnhealth.org) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை கீழிறக்கம் செய்தும் விëணப்பமாக பயன்படுத்தலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது `செக்ரட்டரி, செலக்சன் கமிட்டி, சென்னை-10' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவு காசோலையை (டிடி) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் வரைவு காசோலை ஏதும் இணைக்கத் தேவையில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவ தேர்வுக்குழு செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் கே.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்