சுயதொழில் துவங்க இலவச பயிற்சியளிக்கிறது சென்னை மாநகராட்சி

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (13:32 IST)
சென்னை மாநகராட்சி சார்பில் சுயதொழில் துவங்க, சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு பயிற்சியுடன் கடனுதவியும் வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இருப்பிட சான்றுடன் (குடும்ப அட்டை) வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 2536 8716 என்ற தொலைபேசி எண் அல்லது மாநகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்