மரு‌த்துவ‌ர்க‌ள் ‌நியமன‌‌த்து‌க்கு நே‌ர்காண‌ல் : அரசு அற‌ி‌வி‌ப்பு

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (15:42 IST)
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் கா‌லி‌ப்ப‌‌ணி‌யிட‌ங்களு‌க்கு வரு‌ம் 22, 23 ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நே‌ர்காண‌ல், கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது எ‌ன்று மக்கள் நல்வா‌ழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "தமி‌ழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செ‌ய்ய 15-10-2008 முதல் 20-10-2008 வரையிலும், 26-11-2008 முதல் 28-11-2008 வரையிலும் கலந்தா‌ய்வு நடைபெற்று 633 மருத்துவர்கள் நியமனம் செ‌ய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு வேலைவா‌ய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வருகிற டிசம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல், கலந்தா‌ய்வு நடத்தப்பட உள்ளது.

கலந்தா‌ய்வில் பங்கு கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்திலபார்த்துத் தெரிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்று அமை‌ச்ச‌ர் ப‌ன்‌னீ‌ர் செ‌‌ல்வ‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.