கலை‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 15 முத‌ல் ‌வி‌ண்ண‌ப்‌ப‌ம் வழ‌ங்க‌ப்படலா‌ம்

புதன், 13 மே 2009 (14:40 IST)
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2009-10 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் +2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் தொடங்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத‌ன்படி, +2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை அதாவது 14-ம் தேதி வெ‌ளியா‌கிறது.

எனவே கலை‌க் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெ‌ளி‌யி‌ட்ட செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், "அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. +2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, விண்ணப்ப விநியோகம் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்து, அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்" எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்