திமுக வேட்பாளார் பட்டியல் வெளியீடு; நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் - கருணாநிதி அறிவிப்பு
வெள்ளி, 14 மார்ச் 2014 (15:35 IST)
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார்.
FILE
வடசென்னை - கிரி ராஜன்; தென்சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்; மத்திய சென்னை- தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதூர் - ஜெகத் ரட்சகன்; காஞ்சிபுரம்(தனி) - செல்வம்; அரக்கோணம் - என்.ஆர்.இளங்கோ; கிருஷ்ணகிரி - சின்ன வெள்ளையப்பா; தருமபுரி - தாமரைச்செல்வன்; திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை; ஆரணி - ஆர்.சிவானந்தம்; விழுப்புரம்(தனி) - முத்தையன்; கள்ளக்குறிச்சி - ஏ.ஆர்.மணிமாறன்; சேலம் - உமாராணி; நாமக்கல் - காந்திசெல்வன்; ஈரோடு - பவித்ரவள்ளி; திருப்பூர் - செந்தில்நாதன்; நீலகிரி(தனி) - ஆ.ராசா;
கோவை - பழனிக்குமார்; பொள்ளாச்சி - பொங்கலூர் பழனிச்சாமி; திண்டுக்கல் - காந்திராமன்; கரூர் - சின்னச்சாமி; திருச்சி - அன்பழகன்; பெரம்பலூர் - பிரபு; கடலூர் - நந்தகோபால கிருஷ்ணன்; நாகப்பட்டினம் - ஏ.கே.எஸ்.விஜயன்; தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு; சிவகங்கை - துரைராஜ்; மதுரை - வேலுச்சாமி; தேனி - பொன்.முத்துராமலிங்கம்; விருதுநகர் - ரத்தினவேல்; ராமநாதபுரம் - முகமது ஜலில்; தூத்துக்குடி- ஜெகன்; திருநெல்வேலி - தேவதாஸ் சுந்தரம்; கன்னியாகுமரி - ராஜரத்தினம்; புதுச்சேரி - ராஜிம் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிவித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இடதுசாரி கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்று சொல்லமாட்டோம். பத்திரிக்கைகள் வாயிலாக அவர்கள் வரலாம் என்று அறிவிக்கிறோம் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை என்றும், 2ஜி வழக்குகள் ஆதாரம் இல்லாமல் ஆடிகொண்டிருக்கிறது என்றும் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.