பாஜக ஆட்சிக்கு வந்தாலும் ஊழலால் நாடு ரத்தம் சிந்தும் - அரவிந்த் கெஜ்ரிவால்

வெள்ளி, 14 மார்ச் 2014 (15:08 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சிக்கு வந்தாலும், நாட்டில் ஊழல் ஒழியாது என தெரிவித்துள்ளார்.
ISRO

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 3 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் எதிலும் மாற்றம் இருக்காது, இந்த நாடு ஊழலால் தொடர்ந்து ரத்தம் சிந்தும்.


நம்முடைய எதிரிகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், மதவாதத்தை ஒழிக்க பிற அரசியல் கட்சிகள் ஏதும் செய்வதில்லை எனக் கூறினார்.
FILE

காசியாபாத்தில் துவங்கிய இந்த பயணம் 500 கி.மீ வரை தொடர்ந்து, 15 நாடாளுமன்ற தொகுதிகளை கடந்து செல்லுமென தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்