விடைத்தாள் நகல் பெற 18 முதல் விண்ணப்பம்

வெள்ளி, 15 மே 2009 (11:14 IST)
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வரு‌ம் ‌தி‌ங்க‌ட்‌கிழமை 18-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.

இது கு‌றி‌த்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் 18-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை வழங்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.275. விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் உரிய கட்டணத்தை `இயக்குனர், அரசு தேர்வுகள், சென்னை-6' என்ற பெயரில் வரைவோலையாக (டிமாண்ட் டிராப்‌ட்) செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். மறுகூட்டலுக்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.205. உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305.

மறுமதிப்பீட்டு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.505 ஆகும். இதற்கான விண்ணப்பம் விடைத்தாள் நகல் வழங்கும்போது இணைத்து அனுப்பப்படும். மறுமதிப்பீட்டு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.505. மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீட்டிற்கும் விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எ‌ன்று வசந்தி ஜீவானந்தம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்