விடிய, விடிய கண்விழித்துப் படிப்பது நல்லதல்ல. 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தேர்வு நாட்களிலும் குறைந்த பட்சம் 6 மணி நேரம் தூங்கிவிடுங்கள்.
இரவு அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதை விட அதிகாலையில் படிப்பது சிறந்தது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தூங்குவது நல்லது.
ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்கக் கூடாது. 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 முதல் 10 நிமிட இடைவெளியுடன் பாடங்களைப் படிக்கலாம்.
தொடர்ந்து படிப்பதை விட இடையே ஏதாவது விளையாட்டு அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் மூளையை களைப்படையாமல் செய்யும்.
தேர்வு முடியும் வரை மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் தொலைக்காட்சிப் பார்ப்பதை தவிர்க்கவும்.
காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் இரண்டு சாப்பிட்டு, பழச்சாறு அல்லது பழங்கள் சில சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவில் சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம்
தேர்வு முடியும் வரை அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அசைவம் ஜீரணிக்க கடினமாகவும், நஞ்சாக மாறும் வாய்ப்பு அதிகமாகவும் இருப்பதால் தவிர்ப்பது நலம்.
எனவே வினாத்தாளை நன்கு படித்துவிட்டு உங்களுக்குத் தெரிந்த கேள்விகளை முடிவு செய்யுங்கள். இதற்கு பென்சிலால் அந்த கேள்வியை ஒரு டிக் செய்யலாம். அந்த கேளவியை எழுதி முடித்ததும் அந்த டிக் மீது மற்றொரு டிக் (எக்ஸ் போன்று) போட்டு உறுதி செய்யலாம்.
நன்கு தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது, அந்த வினாவுக்கான எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம்.
webdunia photo
WD
முதல் மணி அடித்தவுடன் எழுதத் தொடங்கி கடைசி மணி அடிப்பதற்குள் முடித்து விட வேண்டும். திருப்புதலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
விடைத்தாளில் விடையைத் தவிர, வேறு எந்த விதமான விஷயங்களையும் எழுதக் கூடாது.