சட்டப் படிப்பு விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

சனி, 12 ஜூலை 2008 (12:05 IST)
சென்னை: சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்