பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வு துவக்கம்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (10:43 IST)
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்று, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்புத் துணைக் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கிறது.

இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்டு உத்தரியராஜ் கூறுகையில், பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வுக்கு சுமார் 1,200 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் அகடமி பிரிவில் 800 விண்ணப்பங்களும், தொழிற்பிரிவில் 160 விண்ணப்பங்களும் தகுதி பெற்றுள்ளன.

துணை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்டவை annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்