பிப்ரவரியில் +2 செய்முறை தேர்வு

சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக் குறிப்பில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. 46 பாடங்களுக்கு 2 கட்டமாக தேர்வு நடக்கும்.

சென்னையில் மட்டும் 403 பள்ளிகளில் படிக்கும் 37,375 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர். முதல் கட்டமாக 207 பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமிருக்கும் 196 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்