தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ராகிங் தடுப்பு குழு

வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (15:24 IST)
ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுப்பதற்காக ராகிங் தடுப்பு குழுவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அமைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட சட்ட விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்றுப் பேசிய தஞ்சாவூர் பல்கலைக்கழக துணை முதல்வர் இளங்கோவன், கல்லூரி விடுதிகளுக்கு வாரம் ஒருமுறை சென்று ஆய்வு மேற்கொள்ளும் இந்த ராகிங் தடுப்புக் குழு அதுதொடர்பாக அறிக்கையையும் பதிவு செய்யும் என்றார்.

ராகிங்கைத் தடுப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்த அவர், முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வி மாணவர்கள் அவர்களின் சீனியர் மாணவர்களிடம் இருந்து தனித்து வைக்கப்படுவர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்