தற்கால அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவசர அவசரமாகவோ, அல்லது கையேந்தி பவனில் நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். உணவு உட்கொள்வது என்பது ஒரு கலை என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அதே சமயம் சாப்பிடும்போது ஒருசில நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். இது நம்முடன் சாப்பிடும் பிற நபர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதுகுறித்து தற்போது பார்ப்போம்