தலித் மக்களின் வீடுகள் வன்னியர்களால் சூறையாடப்பட்டு, பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வண்டி, வாகனங்கள் எரிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டது. இவ்வளவு வன்முறைக்கும் காரணம் ஒரு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.