''நான் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முந்தைய தினமே சங்கிலி பறிப்பு நிகழ்வுகள் வெகுவாக குறைந்துவிட்டது, சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வந்துள்ளது'' என்று கடந்த மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதா கூறியிருந்தார்.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரகுராமன் என்பவர் வீட்டில் 150 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைபோன தங்க நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம். 3 கிலோ வெள்ளி நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம். ரொக்கப்பணம் ரூ.1 லட்சம். மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை நிகழ்வுகள் அனைத்தும் நேற்று நடந்தவை. சங்கிலி திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இது பற்றிய தகவல் இன்னமும் செல்லாமலா இருக்கும்?
இந்நிலையில்,.கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து காவல்துறையை சேர்ந்த சிலரும் ஈடுபட்டு வருவதாக ஒரு குற்றச்சாற்று அண்மை காலமாக இருந்து வருகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.