காவல் நிலையத்தில் சரளமாகப் புழங்கும் நாய்கள்!

புதன், 12 செப்டம்பர் 2012 (15:51 IST)
காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்க வருபவர்கள் ஏற்கனவே உள்ளே இருக்கும் காவலதிகாரிகளைக் கண்டு பயந்து போயிருக்கும் வேளையில், போலீஸ் நிலைய அறையில் சரளமாகப் புழங்கும் நாய்களைக் கண்டும் இனி அஞ்சவேண்டும் போலும்! (படமே சாட்சி)
PR

இடம் செங்குன்றம் M4 காவல் நிலையம் பொது மக்கள் எத்தனைப் பேர் சொன்னாலும் எகத்தாலம் பேசுபவர்களாக உள்ளனர் காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக அங்குள்ள ரைட்டர் சங்கர் என்பவரிடம் இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டப் பிறகும் "அது அப்படிதான் இருக்கும் நீங்க ஓரம்போங்க" என்று நம்மை ஓரம் கட்டச்சொல்கிறார்.

"காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தவர் நாய் கடித்து பலி" என்று ஒரு சோகச்செய்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக நாம் எச்சரித்தும் எடுத்துக்கொள்ளவில்லை!

தெரு நாய்க்கு கிடைக்கும் மரியாதை மனுஷனுக்கு கிடைக்கிறதில்ல! என்று அங்குள்ள மக்கள் புலம்புகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்