மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொயின்கானை உடனே நாடு திரும்ப உத்தரவிட்டது. இதனால் மொயின்கான் தற்போது நாடு திரும்பியுள்ளார். கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மொய்ன்கானுக்கு ரசிகர்கள் தங்கள் முட்டைகளை அவரவர் தலையிலேயே உடைத்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து மொய்ன்கான் கூறுகையில், தேசத்தை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார். நான் உணவு அருந்தவே அந்த கிளப்பிற்கு சென்றேன் என விளக்கம் அளித்துள்ளார்.