2015 உலகக்கோப்பை: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

சனி, 14 பிப்ரவரி 2015 (20:03 IST)
இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டது.
 
மெல்போர்னில் இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்களை குவித்தது.

 
அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 135 (1 பவுண்டரிகள், 3 சிக்ஸர்) ரன்களும், மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்கள் குவித்தனர். அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி 55 ரன்களையும் எடுத்தார்.
 
அடுத்து 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. அதன் அணியில் மொய்ன் அலி, பேலன்ஸ் தலா 10 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இங்கிலாந்து அணியில் அதிகட்சமாக டெய்லர் 98 ரன்களும், வோக்ஸ் 37 ரன்களையும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

 
இறுதியில் இங்கிலாந்து 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இங்கிலாந்து வீரர் ஃபின் அசத்தியிருந்தார்.
 
ஆஸ்திரேலிய அணியின் மார்ஷ் 9 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்