2023- ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் எப்போது? வெளியான தகவல்

புதன், 9 நவம்பர் 2022 (21:59 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மா நிலத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் என்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடை காலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இதில், பல நாடுகளைச் சேர்ந்த  சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடுவதால், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது.

எனவே. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற ஐபிஎல் போட்டியில் 2023  ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஏலம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மா நிலத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் என்றும், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி டெவில்ஸ் ராஜஸ்டர் உள்ளிட்ட அணிகள்  அனைத்தும் ரூ.95 கோடி செலவிட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது,.

2022 ஆம் ஆண்டிற்காக ஏலத்தொகை ரூ.90 கோடியாக இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ.5 கோடி அதிகரித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்