விராட் கோஹ்லி ஸ்பெஷலான வீரர்: பாக். மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்

செவ்வாய், 15 மார்ச் 2016 (11:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி ஒரு ஸ்பெஷலான வீரர் என பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சனா மிர் கூறியுள்ளார்.


 

 
20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் பெண்கள் அணி இந்தியா வந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் சனா மிர் கூறுகையில் எங்கள் அணியில் அனைவருக்கும் விராட் கோஹ்லியை தான் பிடிக்கும். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர்.
 
தனிப்பட்ட முறையில் இந்தியாவை வழி நடத்தி செல்லும் தோனியைத்தான் தமக்கு பிடிக்கும் எனவும் சானா மிர் கூறியுள்ளார். மேலும் தன்னை தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகைகள் என்றார்.
 
ஒரு காலத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது என்பது எங்கள் நாட்டில் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்துகிறார்கள். இந்திய வீரர்களான தோனியும், விராட் கோலியும் பாகிஸ்தானில் மிகவும் பிரபலம் என கூறினார் சனா மிர்.
 
சமீபத்தில் பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்தியாவை புகழ்ந்து பேசி அந்நாட்டில் சர்ச்சையில் சிக்கி கொண்டார். தற்போது பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் சனா மிர் இந்திய வீரர்கள் கோஹ்லி மற்றும் தோனியை புகழ்ந்துள்ளார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்