பிக்பாஸ் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (14:12 IST)
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் பெண்களுக்கான டி&20 கிரிக்கெட் போட்டியும் நடக்கிறது. இதில், ஆஸ்திரேலியாவின் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக இந்திய வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 


இதனை சிட்னி அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இவர் விளையாட உள்ளார். அன்னிய மண்ணில் நடக்கும் உள்ளூர்போட்டிகளில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன் பிரீத் கவுர் பெற்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்