கிரிக்கெட் மைதானத்துக்குள் சுனில் கவாஸ்கருக்கு அனுமதி மறுப்பு

திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (13:27 IST)
அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு அனுமதிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 


 
அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடையில் இரண்டாவது டி20 போட்டி நடைப்பெற்றது. போட்டிக்கான வர்ணணையாளர் குழுவில் இடம்பெற்று இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், சற்று முன்னதாகவே மைதானத்துக்கு சென்றுள்ளார்.
 
அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தின் நுழைவு வாயிலில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் காக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். இச்சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்