இங்கிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 1 டி20 போட்டியில் விளையாட இருக்கும் இலங்கை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது தினேஷ் சண்டிமால் அடித்த பந்து கவுஷல் சில்வாவின் தலையை தாக்கியது.
இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடிய கவுஷல் சில்வா 404 ரன்கள் எடுத்துள்ளார். இதேப்போல் தான் ஆஸ்திரேலிய வீரர் பிலிப்ஸ் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி அவர் மரணமடைந்த சம்பவம் நடந்தது. அதனை சிட்னி துயரச்சம்பவம் என கூறும் அளவுக்கு கிரிக்கெட் உலகில் அந்த மரணம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இலங்கை வீரர் தற்போது பந்து தாக்கியதால் கவலைக்கிடமாக இருப்பதால் கிரிக்கெட்டில் உலகில் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.