இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சமீப காலங்களில் சரியாக சோபிக்கவில்லை. நடந்து கொண்டிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநால் போட்டிகளின் இரண்டு ஆட்டங்களில் முறையே 2, 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறும்போது, ”தவான் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆசிய துணை கண்டங்களுக்கு வெளியே வீரர்கள் ரன்களை குவிக்க விரும்புகின்றனர்.