இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விராட் கோலி, “நீண்டகாலமாக ஒவ்வொரு எதிர்மறையான விஷயங்களையும் அனுஷ்கா சர்மாவுடன் தொடர்புபடுத்தி பேசுவது நடைபெற்று வருகிறது. இது வெட்ககேடான விஷயமாகும். இந்த வெட்ககேடான மனிதர்கள்தான் தங்களை படித்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
அவர் என் மீது எந்த ஆதிக்கத்தையும் செலுத்தாதபோது, நான் எனது விளையாட்டில் செய்யும் தவறுகளுக்கு அவரை குற்றச்சாட்டுவதோ, கிண்டல் செய்வதோ வெட்கக்கேடானது. அவர் என்னை ஒவ்வொரு சமயமும் ஊக்கப்படுத்தவும், நேர்மறையான விஷயங்களையேதான் வழங்கினார்.
இது நீண்டகாலமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த மனிதர்கள் மறைந்திருந்து தாக்குவது வெட்கமாக உள்ளது. மேலும், இந்த பதிவிற்கு எந்த பின்னூட்டமும் எனக்கு தேவையில்லை. அவர் மீது இரக்கும், மரியாதையும் காட்டுங்கள்.