ஐபிஎல் போட்டியில் முதன் முதலாக மகனுடன் தோன்றிய ஷாருக் கான்

வியாழன், 9 ஏப்ரல் 2015 (13:30 IST)
ஷாருக் கான் முதன் முதலாக தனது 2 வயது மகனுடன் ஐபிஎல் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்தார்.
 

 
நேற்று புதன் கிழமை [08-04-15] அன்று 8ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற்றது.
 

 
இந்த போட்டியைக் காண கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பாலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருடைய 2 வயது மகனான அப்ரமையும் அழைத்து வந்திருந்தார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

 


ஐபிஎல் போட்டையை காண தனது மகனையும் அழைத்து வந்திருந்தது இதுவே முதன் முறையாகும். அப்ரம் பெரும்பாலான நேரம் தனது தந்தை ஷாருக் கானின் தோளில் ஏறி அமர்ந்திருந்தார். மேலும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் ’லோகோ’ பதிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்