நேற்று புதன் கிழமை [08-04-15] அன்று 8ஆவது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற்றது.
இந்த போட்டியைக் காண கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பாலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருடைய 2 வயது மகனான அப்ரமையும் அழைத்து வந்திருந்தார்.