முன்னாள் செயலாளரும், கிரிக்கெட் வீரரும் என்னை பலாத்காரம் செய்தார்கள்: புயலை கிளப்பும் பெண்!

செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (12:01 IST)
இலங்கை கிரிக்கெட் உலகில் பெண் ஒருவர் கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வர்த்தக பிரிவின் முகாமையாளராக பணியாற்றிய காயத்திரி விக்ரம சிங்க தான் பாலியல் புகாரை கூறியுள்ளார்.


 
 
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஏஸ்லி டி சில்வா உள்பட சில அதிகாரிகள் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார் காயத்திரி விக்ரம சிங்க.
 
மேலும், முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் கூறினார். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் இலங்கை கிரிக்கெட் வரியத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
 
காயத்திரி விக்ரம சிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தியபோது, இந்த பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்