இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகிய 3 பேரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. இதனை கிரிக்கெட் வாரிய செயலாளர் திரு அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.