“தினேஷ் கார்த்திக் பற்றி யோசிக்கவே கூடாது… தீபக் ஹூடா vs ரிஷப் பண்ட்…” முன்னாள் வீரரின் கருத்து!

ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (08:16 IST)
இந்திய டி 20 அணியில் வீரர்களை தேர்வு செய்வது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு முக்கியக் காரணம் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பின்வரிசை பேட்டிங்க்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பின் வரிசை பேட்டிங்கில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை களமிறக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இந்நிலையில் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள மூத்த வீரர் ராபின் உத்தப்பா “ தீபக் ஹூடாவைதான் 5 ஆவது இறக்க வேண்டும். கூடுதலாக அவருக்கு பந்துவீசும் ஆற்றலும் உள்ளது. 6 ஆவது இடத்தில் தினேஷ் கார்த்திக்தான். அவரை உட்கார வைப்பது குறித்து யோசிக்கவே கூடாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்