இந்திய அணி ஜிம்பாப்வே பயணம்

செவ்வாய், 7 ஜூலை 2015 (13:00 IST)
கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது. 
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 ஒரு நாள் போட்டி, 2 டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இதில் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வேக்கு பயணிக்கிறது. அணியில் தமிழக வீரர் முரளி விஜய், உத்தப்பா அணியில் இடம் பிடித்துள்ளனர்.  மேலும் இரு அணிகள் மோதும்  முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்