இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கம்பிர், ”எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளும் வரை அந்நாட்டுடன் எந்த பிணைப்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன். ஏனென்றால், மக்கள் தங்களது குழந்தைகளை, தந்தையை, கணவனை இழந்து நிற்பதை நான் உணர்கிறேன்.
நான் குளிரறையில் அமர்ந்து கொண்டு நாம் விளையாடக் கூடாது என்றோ, கிரிக்கெட்டை அரசியலுடன் ஒப்பு நோக்கக்கூடாது என்றோ, நாம் அரசியலையும், பாலிவுட்டையும் ஒப்பு நோக்கக்கூடாது என்றோ பேச முடியும். ஆனால், மக்கள் அவர்களின் அன்பானவர்களை இழப்பதை தெளிவாகவே உணருகிறேன்.