டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்கம் முதலே தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய இந்திய அணியின் முன்கள வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்டினர்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 43.4 ஓவரின் போது தென் ஆப்பிரிக்க அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.