ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 49ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை ஜிம்பாப்வே அணியின் பன்யங்கரா (Tinashe Panyangara) வீசினார். இப்பந்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் (Mitchell Johnson) சந்தித்தார். இப்பந்தை எதிர்கொண்ட ஜான்சன், இமாலய சிக்சர் அடித்தார். பந்து நேராக வர்ணனையாளர்கள் உட்கார்ந்திருந்த அறையை நோக்கிச் சென்று, அங்கிருந்த கண்ணாடியை உடைத்தது.