அடுத்த வான வேடிக்கைக்கு தயாராகுங்கள் - வருகிறது ‘மினி ஐபிஎல்’

வெள்ளி, 24 ஜூன் 2016 (17:05 IST)
வரும் செப்டம்பரில் ’மினி ஐபிஎல்’ அல்லது ’ஐபிஎல் ஓவர்சீஸ்’ தொடர் வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், “இந்த ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் செப்டம்பர் மாதம் நடக்கும் என்றும் இதில் அதே 8 அணிகளும் பங்கேற்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ’இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போல் நீண்டதாக அல்லாமல் குறுகிய வடிவிலானதாக இருக்கும். குறைவான போட்டிகள் கொண்டதாக இருக்கும். 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம்’ என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்