கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 11-வது ஓவர் முதல் 15-வது ஓவர் வரை மற்ற கேப்டன்கள் ரன் கொடுக்காமல் பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் கம்பீர், தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க பவுலர்களை ஊக்குவித்து வந்தார். ஆக்ரோஷமான மனநிலை மற்றும் தன் வீரர்களிடத்திலிருந்த திறமைகளில் சிறந்தவற்றை வெளிக்கொண்டுவந்த கம்பீர் இந்தத் தொடரின் சிறந்த கேப்டன் என்றும் வாசிம் அக்ரம் கூறினார்.