இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை [30-09-15] அன்று, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் இந்திய மண்ணில் நடைபெறும் 250-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதையொட்டி கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, 250-வது டெஸ்ட் போட்டியை ஒட்டி கங்குலியின் யோசனைப்படி முன்னாள் கேப்டனும் உலக சாதனையாளருமான கபில்தேவ் மணியடித்து போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டி நடைபெறும் 5 தினங்களிலும் முக்கிய பிரமுகர்கள் மணியடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.