டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கும் நேரம் வந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த உலகக் கோப்பை 2019ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இடையில் பெரிய தொடர்கள் எதுவுமில்லை. எனவே விராட் கோலியை கேப்டனாக நியமித்து, உலக கோப்பைக்கு ஏற்ற வலுவான அணியான இந்திய அணியை மாற்ற இதுவே சரியான தருணம்” என்று அவர் கூறினார்.