சமீபத்தில் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கும் சென்றார். பின்னர் ஜாமீன் பெற்று வெளிவந்து புவனேஸ்வரி தேவி என்ற பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ரீசாந்த் - புவனேஸ்வரி தேவி தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எங்களுக்கு அருமையான ஒரு தேவதை பிறந்துள்ளதாக ஸ்ரீசாந்த் டுவிட் செய்துள்ளார்.