ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் கோலி விளாசினார்.
இதன் மூலம் சென்னை அணிக்கு எதிராக ஒட்டு மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி, 646 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தனிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.