இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும்: சேத்தன் சவுகான்

திங்கள், 17 செப்டம்பர் 2018 (12:52 IST)
நடைபெற இருக்கிற ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என  உத்தர பிரதேச மாநில விளையாட்டு துறை அமைச்சர் சேத்தன் சவுகான் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,உத்தரபிரதேச மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுகான் கூறியுள்ளதாவது:”இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர்.  ஆகவே அந்த பணியை செய்வதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.இனி வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்