இந்திய பவுலர்களின் தாக்குதலில் திணறும் இலங்கை பேட்ஸ்மேன்கள்!

வியாழன், 12 ஜனவரி 2023 (16:02 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி ஆரம்பத்தை சிறப்பாக தொடங்கிய போதும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது 7 விக்கெட்களை இழந்துள்ள இலங்கை அணி 164 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்