டி20 கிரிக்கெட்: இங்கிலாந்திற்கு 148 ரன்களை நிர்ணயித்த இந்தியா

வியாழன், 26 ஜனவரி 2017 (19:10 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி, இங்கிலாந்திற்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


 

 
இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. 
 
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன், இந்திய அணியை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி மொத்தம் 7 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் தோனி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 36 ரன்கள் எடுத்தார். 
 
எனவே, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலைக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்